Theeratha vilayattu pillai nithyasree mahadevan biography

  • Theeratha vilayattu pillai nithyasree mahadevan biography
  • Nithyasree songs

    Nithyasree mahadevan family...

    பாரதியார் கவிதைகள்/Bharathiyar Kavithaigal

    பாடல் 1
    தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

    தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
    எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

    (தீராத)

    தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
    செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
    மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
    மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்.

    Theeratha vilayattu pillai nithyasree mahadevan biography

  • Nithyasree songs
  • Nithyasree mahadevan family
  • Nithyasree mahadevan photo
  • Nithyasree mahadevan facebook
  • (தீராத)

    அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
    அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
    குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
    குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

    பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
    பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
    வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

    (தீராத)

    புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
    பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
    கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
    கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

    அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
    ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
    எங்காகிலும் பார்த்த துண்டோ?